கைதான சாம்சங் ஊழியர்கள் பரபரப்பு தகவல்...

x

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் போராட்ட திடலுக்கு வந்த சாம்சங் ஊழியர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொழிற்சங்க உரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஊழியர்கள் போராடுகின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில் சிறுமாங்காடு, எச்சூர், குன்னம் சந்திப்பில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அனைவரின் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை சோதனை செய்தனர். சாம்சங் ஊழியர்கள் என்பது தெரியவந்தால், உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார், தனியார் மண்டபத்தில் அடைத்து வருகின்றனர். இதனிடையே, சிஐடியு மாநில தலைவர் சௌந்திரராஜன், மாவட்டச் செயலாளர் முத்துகுமார் உள்பட 625 பேர் மீது சுங்குவார்சத்திர போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்