உக்கிரமடையும் போராட்டம்... 600க்கும் மேற்பட்டோர் கைது... பரபரக்கும் காஞ்சி | Samsung

x

சாம்சங் நிறுவன தொழிலாளர் போராட்ட விவகாரத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநிலத்தலைவர் செளந்தரராஜன் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே, சாம்சங் நிறுவன தொழிலாளர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், நேற்று இரவு போலீசார் பந்தலை அப்புறப்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில், அதே இடத்தில் சாம்சங் ஊழியர்கள் திரண்டதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சவுந்தரராஜன், சாம்சங் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோரும் கலந்து கொண்ட நிலையில், கனமழை குறுக்கிட்டது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தரையில் அமர்ந்து, அனைவரும் தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். தொடர்ந்து, சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்தரராஜன் மற்றும் சாம்சங் ஊழியர்கள் என 616 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்