வார்னிங் கொடுத்த நிறுவனம்.. கடும் கோபமான சாம்சங் ஊழியர்கள்! | Samsung

x

வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டுமென, ஊழியர்களுக்கு சாம்சங் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, CITU தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9-ம் தேதி முதல் 17-வது நாளாக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், போராட்ட விவகாரத்தில் மூன்றாவது அல்லது வெளிப்புற நபர்களின் ஈடுபாட்டை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு எதிர்நோக்கி காத்திருப்பதாகவும், நியாயமற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்திவிட்டு உடனடியாக வேலைக்கு திரும்பும்படியும், நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்