சாம்சங் தொழிலாளர் போராட்டம் - நேரில் சென்ற செல்வப் பெருந்தகை

x

சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொண்டு செல்வேன் என ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.வும், தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களை நேரில் சந்தித்து, செல்வப் பெருந்தகை கோரிக்கைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஆலை நிர்வாகம் பணிவோடு கையாள வேண்டும் என வலியுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்