"சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.750 கோடி இழப்பு"

x

"சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் ரூ.750 கோடி இழப்பு" |


சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் சங்கத்தை பதிவு செய்ய தொழிற்சங்க பதிவாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் துணை ஆணையருக்கும் உத்தரவிடக்கோரி அதன் செயலாளர் எல்லன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையின் போது, வழக்கில் தங்களையும் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக சாம்சங் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, சங்கத்தை பதிவு செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாம்சங் தரப்பு, சங்கம் அரசியல் கட்சியுடன் தொடர்பு இருப்பதால் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களது நிறுவன பெயரை சேர்க்காமல் சங்கத்தை பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டது. மேலும், தொழிலாளர்களின் சமீபத்திய போராட்டத்தால் நிறுவனத்திற்கு 750 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரர் தரப்பில், சாம்சங் என்ற பெயரில் கொரியாவில் தொழிற்சங்கம் வைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் சாம்சங் நிறுவனத்தை எதிர் மனுதாரராக சேர்க்க தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்