காவிரி கரையில் கோரமாக கிடந்த சடலம்.. கதிகலங்கிய ஊர் மக்கள்

x

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே காவிரி கரையோரத்தில் வெட்டு காயங்களுடன் கிடந்த கூலி தொழிலாளியின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புளியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவிரி கரையோர பகுதியில் தலையில் வெட்டு காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. விசாரணையில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டாங்குட்டை பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாதேஷ் என்பது தெரியவந்தது. மாதேஷ் கொலை செய்யப்பட்டாரா, மது போதையில் கீழே விழுந்து உயிரிழந்தாரா? உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்