பதிவுத்துறை டி.ஐ.ஜி.,யிடம் விசாரணை..! வெளிவந்த பல அதிர்ச்சி தகவல் | Salem Registry DIG

x

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரப்பதிவு துறை டி.ஐ.ஜி ரவீந்திரநாத்தை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

பெருங்களத்தூரை சேர்ந்த கலைவாணி என்பவருக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் நிலத்தையும், தாம்பரத்தை சேர்ந்த சையது அமீன் என்பவருக்கு சொந்தமான 10 கோடி நிலத்தையும் போலி ஆவணம் மூலமாக பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக ரவீந்திரநாத் 2 முறை கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, எவ்வளவு பணம் லஞ்சமாக பெறப்பட்டது, இன்னும் எத்தனை பேரிடம் பணம் வாங்கிக் கொண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்