அரசு நிகழ்ச்சிக்கு குப்பை வண்டியில் பெண்களை ஏற்றி வந்த அவலம்

x

அரசு நிகழ்ச்சிக்கு குப்பை வண்டியில் பெண்களை ஏற்றி வந்த அவலம்

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அமைச்சர் ராஜேந்திரன் பங்கேற்ற மக்கள் சந்திப்பு முகாமுக்கு, பெண்களை குப்பை வண்டியில் ஏற்றி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரங்கில் மக்கள் அதிகம்‌ இல்லாததால் அதிக ஆட்களை திரட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்த‌தாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஏற்காடு மலை கிராமங்களில், நூறு நாள் வேலையில் ஈடுபடும் பெண்களை கூட்டம் கூட்டமாக பஞ்சாயத்து குப்பை வண்டியில் ஏற்றி வந்து கூட்டத்தில் அமர வைத்த‌தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்