சேலத்தை அதிர வைத்த வீடியோ... அரங்கேறிய அதிர்ச்சி... சிக்கிய இருவர் - பகீர் பின்னணி

x

சேலம் டவுன் ஆனந்தாபாலம் பகுதியில் மாநகராட்சி அடுக்குமாடி வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் அங்கு சில இளைஞர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானதை தொடர்ந்து, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் முழுவதும் தூய்மை செய்யப்பட்டு, காவலாளி பணி அமர்த்தப்பட்டு, சில நாட்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்நிலையில், போதை ஊசி மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்த திருவாக்கவுண்டனூரை சேர்ந்த தீபக்சரண், ஜாகிர் அம்மாபாளையத்தை சேர்ந்த தனசேகரனை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 போதை மாத்திரைகள், எட்டு ஊசிகள் மற்றும் ஊசிக்கு பயன்படுத்தப்படும் 100 மில்லி மருந்துபாட்டிலை பறிமுதல் செய்தனர். போதை ஊசி பயன்படுத்திய 4 பேரை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்