சிறுவர்களுக்குள் ஏற்பட்ட சண்டை.. தட்டி கேட்க போன தந்தை.. கொலையில் முடிந்த கோபம்

x

சேலத்தில் பள்ளி பேருந்தில் சிறுவனை கிண்டல் செய்ததாக, பெற்றோரிடையே ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்த‌து.

சேலம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் நவீன் என்பவர், தான் படிக்கும் பள்ளியில் ஷஸ்மித் என்ற சிறுவனை தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால், ஷஸ்மித்தின் தந்தை முத்து, நண்பர்களுடன் கனகராஜின் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, பட்டாக் கத்தியால் தாக்கியதால் படுகாயமடைந்த கனகராஜ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி கனகராஜ் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முத்துவை கைது செய்துள்ளனர். சிறுவர்களிடையே ஏற்பட்ட சிறிய சண்டை, பெற்றோர்களிடையே மோதலாக மாறி, ஒருவரது உயிரை பறித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்