ரூ.12 லட்சத்தை கத்தியை காட்டி பறித்த முகமூடி கொள்ளையர்கள்.. சேலத்தில் பரபரப்பு

x

சேலம் அயோத்தியாபட்டணத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன மேலாளர் யுவராஜும், ஊழியர் குமாரும் 12 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சேலம் உடையாபட்டி கந்தகிரி சாலையில் இவர்களது வாகனத்தை மூன்று இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்துகொண்டு வந்த ஆறு மர்மநபர்கள் மறித்துள்ளனர். தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தை அபகரித்துள்ளனர். மேலும் குமாரின் செல்போனை சாலையில் அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக யுவராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், சேலம் அம்மாபேட்டை போலீசார் முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்