ஆசிரியரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுத மாணவிகள்

x

சேலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதல் பெற்ற நிலையில், அவரது பிரிவைத் தாங்க முடியாமல் மாணவிகள் கண்ணீர்விட்டு வேதனையை வெளிப்படுத்தினர். சேலம் நகர மகளிர் மேல்நிலைப்பள்ளியில், ஸ்ரீராம் என்பவர் ஆங்கில ஆசிரியராக கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆத்தூர் அருகே உள்ள துறையூர் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பணி மாறுதல் பெற்றார். பள்ளியில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், மாணவிகள் கண்ணீருடன், ஆசிரியர் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்