இரவு முழுவதும் கொட்டிய கனமழை.. - தெப்பமாக மாறிய பள்ளி..

x

சேலம் மாவட்டம் மேட்டூரில் அரசு பள்ளியில் மழைநீர் தேங்கியதால் மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். மாதையன் குட்டை பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையால், பள்ளி வளாகத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. கட்டடத்திற்குள் தேங்கிய மழைநீரை சமூக ஆர்வலர்கள் வாளி மூலம் அகற்றினர். இந்த சூழலில், மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்