மாணவி வாயை பொத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த மர்ம நபர்..! போராட்டத்தில் குதித்த பெற்றோர்..! சேலம் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்

x

சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறைக்குச் சென்ற பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதாக கூறி, பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஆத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் ப ள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் மாணவி ஒருவர் சில தினங்களுக்கு முன் கழிவறைக்குச் சென்றபோது சுற்றுச்சுவர் மீது ஏறி வந்த மர்ம நபர்கள் அந்த மாணவியின் வாயில் துணி வைத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக ௯றப்படுகிறது. இதை அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கேட்பதற்காக பள்ளிக்கு வந்தபோது தலைமை ஆசிரியர் இல்லை என அவரது அறையை பூட்டினர். தலைமை ஆசிரியர் மீது விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்