ஒரே இடத்தில் இருந்த ஆபத்து..மீண்டும் மீண்டும் விழுந்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்

x

ஒரே இடத்தில் இருந்த ஆபத்து..மீண்டும் மீண்டும் விழுந்த மக்கள் - பரபரப்பு காட்சிகள்

சேலத்தில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் தடுமாறி விழுந்தனர்.

சேலத்தில் கனமழை பெய்த நிலையில், கிச்சிப்பாளையம் பிரதானசாலையில் மழைநீருடன் சாக்கடைநீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். குறிப்பாக சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை அங்கிருந்த போலீசார் பத்திரமாக மீட்டனர்.

இதேபோன்று முதியவர் ஒருவரும் தடுமாறி கீழே விழுந்தார். அவரையும் மீட்டு பத்திரமாக அனுப்பி வைத்த போலீசார், மழைநீரில் சிக்கிய ஆட்டோ ஒன்றையும் மீட்டு அனுப்பி வைத்தனர்.

சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்