ஒரு மணி நேரமாக அடித்து பிரித்து மேய்ந்த கனமழை.. குளம் போல் மாறிய பேருந்து நிலையம்

x

ஒரு மணி நேரமாக அடித்து பிரித்து மேய்ந்த கனமழை.. குளம் போல் மாறிய பேருந்து நிலையம்

சேலத்தில் ஒருமணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழையால் பேருந்து நிலையம் சாலையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியுற்றனர். சேலம் மாநகர் பகுதிகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நான்குரோடு, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் , சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் சாரதா கல்லூரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்