கணவர் இறந்த பின் போலீஸ் கொழுந்தனார் கொடுத்த டார்ச்சர்..- பெண் பரபரப்பு குற்றச்சாட்டு..

x

கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், கணவரின் சகோதரர் தனது சொத்துக்களை அபகரிக்க முயல்வதாக கூறி 3 குழந்தைகளுடன் காவல்நிலையம் விரைந்து பெண் புகாரளித்திருக்கிறார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பாலகுட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரா. செந்தில் முருகன் என்பவருடன் திருமணமான இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான செந்தில்குமார், கடந்த 14 ஆம் தேதி பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், செந்தில்குமாரின் தாய், சகோதரி மற்றும் சகோதரர் ஒன்று சேர்ந்து சந்திராவை அவரது குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டை விட்டு விரட்ட முயல்வதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சொத்தை அபகரிக்கும் நோக்கில், மூவரும் சந்திராவின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பறித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதில், சந்திராவின் கணவருடைய சகோதரர் சேலம் மாநகர காவல்துறையில் போலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தன் 3 குழந்தைகளுடனும் ஓமலூர் காவல்நிலையம் விரைந்த சந்திரா, மேலும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து புகாரளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்