ஈபிஎஸ் மண்ணில் அதிமுகவினரை அதிர்ச்சியாக்கிய போஸ்டர் - வெளியான பகீர் சிசிடிவி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. குறித்து அவதூறு சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவின் உறவினரை போலீசார் கைது செய்தனர்.ஓமலூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் குறித்து ஓமலூர் நகர் பகுதி முழுவதும் சுவரொட்டிகள் அச்சடித்து ஒட்டப்பட்டன. அதில், கொல்லிமலை புகழ் மாந்திரீக சக்கரவர்த்தி, சித்தர் ஸ்ரீ கருப்பூர் வெற்றிவேல் சுவாமிகள் என்றும், அனைத்து விதமான பில்லி, சூனியம், ஏவல், செய்வினை போன்ற சகல வித்தைகளும் கைதேர்ந்த சிஷ்யர்களால் தரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. முகவரி, செல்போன் எண் புகைப்படம் அச்சிடப்பட்ட நிலையில், அதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் வெற்றிவேல் புகார் அளித்தார். இதுதொடர்பாக மேட்டூரை சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் என்பவரை போலீசார் கைது செய்து, சுவரொட்டி ஒட்ட பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஓமலூர் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணனின் சம்பந்தி என்றும், தனது சம்மந்தியை கட்சியில் வளரவிடாமல், அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தடுத்து வந்ததால், வெற்றிவேல் குறித்து இதுபோன்ற சுவரொட்டிகளை ஒட்டியதும் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்