கணவரை கழுத்தறுத்து கொன்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனைவி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் செல்வம். 65 வயது முதியவரான இவருக்கு, பூங்கொடி என்பவருடன் திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பூங்கொடி மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், சம்பவத்தன்று மதுபோதையில் தூங்கி கொண்டிருந்த செல்வத்தை, பூங்கொடி அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையை கையிலெடுத்திருக்கும் போலீசார், முதியவரின் மனைவி பூங்கொடியை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்