பஸ்ஸில் திருடுபோன பணம்.. "அய்யோ சாமி.. நான் என்ன பண்ணுவேன்" - நடுரோட்டில் கதறி துடித்த மூதாட்டி

x

சேலத்தில் ஓடும் பேருந்தில் மூதாட்டியின் மஞ்சைப் பையை பிளேடால் கிழித்து உள்ளே இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம், நகை ரசீதுகள், மருந்து சீட்டுகளைத் திருடன் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கந்தம்பட்டியைச் சேர்ந்த மூதாட்டி பாப்பாத்தி மருத்துவமனை சென்று விட்டு வேலைக்கு போக அரசுப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார்... அப்போது தான் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது... உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்திற்குள் வந்த மூதாட்டி அங்கே பதற்றத்துடன் கதறியழுதது காண்போரைக் கலங்கச் செய்தது... இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் போலீசார் விரைந்து செயல்பட்டு திருடனைப் பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்