எரிந்து எலும்பு கூடான 4 பைக்குகள் சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

x

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள தாரமங்கலம் சின்ன ஏரிக்கரை பகுதியில், நேற்று நள்ளிரவில், ஒரு வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்களுக்கு, மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். இதில் நான்கு மோட்டார் சைக்கிள்கள் முழுமையாக எரிந்து எலும்பு கூடாக மாறின. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாரமங்கலம் காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு புகார் அளித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக தீ வைத்து எரித்து இருப்பது தெரிய வந்தது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்த பின் அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்