சைதை துரைசாமியின் கடைசி நம்பிக்கையும் பொய்த்தது.. தலை காக்காத தர்மம்.. இடிந்து போன அரசியல் களம்

x

சென்னையின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, நண்பர்களுடன் கடந்த 4 ம் தேதி இமாச்சலபிரேதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டம் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சட்லஜ் நதிக்கரையோரம் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் 200 அடி பள்ளத்தில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், உடன் வந்த நண்பர் கோபிநாத் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தின்போது, காரிலிருந்த வெற்றி துரைசாமி மாயமான நிலையில், 100க்கும் மேற்பட்ட மீட்புக் குழு படையினர், சட்லஜ் நதியில் கடந்த 8 நாட்களாக தேடியும் உடல் கிடைக்காததால் விரக்தி அடைந்தனர். இந்த நிலையில், ஒன்பதாவது நாளாக மீட்பு பணி தொடர்ந்த சூழலில், விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில், நீருக்கு அடியில் பாறைகளுக்கிடையே சிக்கி இருந்த வெற்றி துரைசாமியின் உடலை மீட்பு குழுவினர் போராடி மீட்டனர். பின்னர் வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிம்லா அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. பிரேத பரிசோதனை முடிந்த பின், வெற்றி துரைசாமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்