மிக ஆபத்தான அணுமின் நிலையத்திலே கை வைத்த புதின்.. - தாக்குதல்..? ஆடிப்போன உலக நாடுகள்

x

ரஷ்யா எல்லைக்குள் புகுந்து உக்ரைன் ராணுவம், 30 கிலோ மீட்டர் வரை ரஷ்யாவிற்குள் சென்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழலில், 2 ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றிய ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் தீப்பிடித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குளிரூட்டும் கோபுரம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அணுசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. இதற்கிடையே ரஷ்ய படைகள் தீ வைத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டினார். பதிலுக்கு உக்ரைன் படைகள் மீது ரஷ்யா குற்றம் சாட்டியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்