ரூ.30 லட்சத்துக்கு டெண்டர்..ஒரே போன் கால் தான்..போலீஸ் ஸ்டேஷன் போன ஒப்பந்ததாரர்

x

சிவகங்கையில், ஒப்பந்ததாரருக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி செந்தமிழ் நகரை சேர்ந்த‌ ஒப்பந்ததாரர் முத்துகுமார், உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். இளையான்குடி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில், சாலை வேலை பார்ப்பதற்கு 30 லட்சம் ரூபாய்க்கு ஆன்லைன் டெண்டர் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில், நள்ளிரவு நேரத்தில் முத்துக்குமாருக்கு போன் செய்த மர்மநபர் ஒருவர், டெண்டர் எதற்காக எடுத்தாய் எனக் கேட்டதுடன், எப்படி வேலையை செய்வாய் எனவும் மிரட்டியுள்ளார். அதுமட்டுமல்லாமல், முத்துக்குமாரின் கடையில் உள்ள பெயர் பலகையை அந்த மர்மகும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்