நேற்று கடலூரே குலைநடுங்கியது.. இன்று புது ரவுடி கை,கால் முறிந்தது..மாவுக்கட்டில் இது புது ஸ்கிரிப்ட்

x

கடலூரில் பட்டாக்கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட புகாரில் கைதாகி தப்பிக்க முயன்ற இளைஞர், கை, கால் முறிவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் சாலக்கரையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், 3 இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் நடனமாடியபடி ரகளையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மண்டபத்தை விட்டு வெளியேறி இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, சாலையில் பட்டாக்கத்தியை சுழற்றிக்கொண்டு பொது மக்களை மிரட்டியபடியே சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற திமுக பிரமுகர் பிரகாஷை வெட்டியதாகவும், இதில் அவருக்கு மூக்கில் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.

விசாரணையில் ரகளையில் ஈடுபட்டது சூர்யா, விக்னேஷ், என்பது தெரியவந்ததை அடுத்து, சூர்யாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுப்பதற்காக போலீசார் அழைத்து சென்ற போது, கெடிலம் தடுப்பணையில் இ்ருந்து குதித்து சூர்யா தப்பிக்க முயன்றதாகவும், அதில் அவரது ஒரு கை, ஒரு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்