பல்கலை. பட்டமளிப்பு விழா.. விழாவை புறக்கணித்த அமைச்சர்..! | RN Ravi

x

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் 6 ஆயிரத்து 940 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15-ஆவது பட்டமளிப்பு விழா, ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது. விழாவில், ஆயிரத்து 917 பேருக்கு முதுநிலை பட்டமும், 3 ஆயிரத்து 455 பேருக்கு இளநிலை பட்டமும், ஆயிரத்து 550 பேருக்கு பட்டயச் சான்றும், 18 பேருக்கு முனைவர் பட்டமும் வழங்கப்பட்டது. இதில், 329 பேர், ஆளுநரிடம் நேரடியாக பட்டம் பெற்றனர். 6 ஆயிரத்து 611 பேர் அஞ்சல் மூலமாக பட்டம் பெறுகின்றனர். புதுடெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வரராவ் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார். விழா அழைப்பிதழில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனின் பெயர் இடம் பெற்றிருந்த போதிலும், அவர் விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.


Next Story

மேலும் செய்திகள்