சிறுவனை குடிக்க வைத்து ரீல்ஸ் எடுத்த கும்பல்.. அதிரடி காட்டிய போலீஸ்.. தி.மலை அதிர்ச்சி சம்பவம்

x

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிறுவனை, கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து, வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமங்கலி கிராம கோயில் திருவிழாவின் போது, இத்தகைய கொடூரம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாக, அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மோரணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி வழக்குபதிந்த, போலீசார், செந்தில்குமார், நவீன் குமார் மற்றும் அஜித் என்ற 3 பேரை கைது செய்து வந்தவாசி சிறையில் அடைத்தனர். மேலும், ஐஐடி மாணவரான சிறாரை, கடலூர் சிறார் சிறைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்