மூதாட்டியிடம் 15 சவரன் நகை கொள்ளை - ரீல்ஸ் கொள்ளையன் கைது

x

இப்படி தன்னை நடிகனாகவே பாவித்துக் கொண்டு ரீல்ஸ் செய்யும் இவர், கொள்ளை சம்பவங்களையும் அரங்கேற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது..


ஆம், ஜாலியாக ரீல்ஸ் செய்து தன்னை கன்டென்ட் கிரியேட்டராக காட்டிக்கொள்ளும் மனோகர், சென்னையில் நடந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார்..

சென்னை திருவான்மியூர் பகுதியில் 88 வயதான மூதாட்டி ஒருவர் தீவிர சாய்பாபா பக்தை. இதனால், அக்கம் பக்கத்தினர் சிலர் அவரது வீட்டிற்கு சென்று சாய்பாபாவை வழிபடுவது வழக்கம்...

இதன் காரணமாக தெரிந்தவர்கள் பெயர் கூறி வருபவர்களையெல்லாம் வாசற்கதவை திறந்து வரவேற்றுள்ளார் அந்த மூதாட்டி...

இதனையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வீட்டில் பணிபுரிந்த ராஜாமணியின் உறவினர் எனக்கூறிக் கொண்டு அடையாளம் தெரியாத ​சிலர் மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

அப்போது தாங்கள் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்து ஸ்ப்ரேவை மூதாட்டி மீது அடித்து கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் இருந்த 15 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

மயக்கம் தெளிந்தவுடன் காவல்துறைக்கு மூதாட்டி தகவல் தெரிவித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்தனர் போலீசார்..

அதில் நகை அடகு கடையில் நகைகளை அடகு வைத்து பணத்தை சரி சமமாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டதோடு, இருவருடன் இருசக்கர வாகனத்தில் தம்பதியாக விக்கிரவாண்டி வரை பயணித்துள்ளனர்.

பின்னர் போலி நம்பர் பிளேட்டை வைத்து பயணித்தவர்கள், விக்கிரவாண்டியை கடந்ததும் உண்மையான நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டு சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

இதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்கேயே அத்தம்பதியினரை கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார் மற்றும் அவரது மனைவி புவனேஷ்வரி என் தெரியவந்தது..

இவர்களிடம் தங்களது பாணியில் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், மூதாட்டி வீட்டில் பணிபுரிந்த ராஜாமணி என்பவர் மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பது குறித்தும் எப்போதும் நகைகளுடனேயே இருப்பார் என்றும் ரீல்ஸ் செய்யும் மனோகரிடம் தெரிவித்துள்ளனர்.

இந்த விவரத்தை வைத்து ஒரு கொள்ளையையே திட்டமிட்டுள்ளார் மனோகர்.. மூதாட்டி முகத்தில் ஸ்ப்ரே அடித்து நகைகளை பறித்து செல்லும் வகையில் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார் ரீல்ஸ் மனோகர்..

தகவலறிந்த போலீசார் முன்னாள் பணியாளர் ராஜாமணியை தேவகோட்டையில் கைது செய்ததோடு, சென்னையில் பதுங்கியிருந்த ரீல்ஸ் மனோகரையும் கைது செய்தனர்.


வைபாக ரீல்ஸ் செய்து அதனை வெளியிட்டு வந்த நிலை மாறி....கூட்டாளிகளுடன் கம்பி எண்ணும் மனோகரின் ரீல்ஸ்கள் தான் இப்போது இணையத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்திருக்கிறது..


Next Story

மேலும் செய்திகள்