"மும்பையை நெருங்கிய ஆபத்து..." ரெட் அலர்ட் கொடுத்த வானிலை மையம் | Red Alert

x

மும்பையின் சில பகுதிகளில் நேற்று 20 சென்டி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்துள்ளதாக வானிலை நிலையங்களின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இன்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் அதை ஆரஞ்சு எச்சரிக்கையாக தெரிவித்துள்ளது. சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் நேற்றைய அளவிற்கு

இன்று இல்லை என்றும், ஆனால் நாளை வரை மழைக்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மும்பையில் பெய்த கனமழைக்கு இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்