``மகளுக்கு கிடைக்காம போய்டுமோ'' - அச்சத்தில் சம்பந்தியை கூலிப்படை ஏவி கொன்ற தாய்

x

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, மகளுக்கு சொத்து கிடைப்பதற்காக சம்பந்தியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆயில்பட்டியைச் சேர்ந்த பெண் அரசு ஊழியரான போதுமணியின் கணவரும், மகனும் இறந்துவிட்டனர். மருமகள் கிருத்திகா பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதால், போதுமணி தனியாக வசித்து வந்துள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் போதுமணியை பராமரித்து வந்துள்ளனர். எனவே, தன்னை பராமரித்து வரும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தமது 2 ஏக்கர் நிலத்தை எழுதி வைக்க போதுமணி முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மருமகள் கிருத்திகாவின் தாயார் துளசி, மகளுக்கு சேர வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடுமோ என அஞ்சியுள்ளார். இதையடுத்து, கூலிப்படையை ஏவி, சம்பத்தி போதுமணியை கொலை செய்ததாக கூறப்படுகிறது. சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்ட போலீசார், துளசி, அவரது கணவர் ஜெயராமன் உள்பட 5 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்