"நல்லா பேசி சிரிச்ச மனைவியை ஒரே நாள்ல பிணமா கொடுத்துட்டாங்கயா..."இரு குழந்தைகளும் இப்ப அநாதையாச்சே"

x

"நல்லா பேசி சிரிச்ச மனைவியை ஒரே

நாள்ல பிணமா கொடுத்துட்டாங்கயா...

"இரு குழந்தைகளும் இப்ப அநாதையாச்சே"

சொல்லி சொல்லி கதறும் கணவன்

குழந்தை பெற்றெடுத்த பெண்ணை, கட்டாயப்படுத்தி குடும்ப கட்டுபாடு சிகிச்சைக்கு செவிலியர்கள் அழைத்துச் சென்றதாகவும், சிகிச்சையின் போது பெண் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் வடக்கு மல்லல் கிராமத்தை சேர்ந்தவர் தவசித்ரா. கர்ப்பம் தரித்திருந்த இவர், உத்தர கோச மங்கையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு, பெண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த செவிலியர்கள்... தவசித்ராவை குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அருகில் உள்ள பெரியபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, குடும்ப கட்டுபாடு செய்ய மேற்கொண்ட சிகிச்சையில், உடலில் மயக்க ஊசி செலுத்தியபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு தவசித்ரா உயிரிழந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மூலம் குடும்ப கட்டுபாடு செய்யப்பட்டதாலும், மருத்துவர்களின் அலட்சியத்தாலும் பெண்ணின் உயிர் பறிபோனதாக தவசித்ராவின் உறவினர்கள் குற்றம் சுமத்தினர். தொடர்ந்து ராமநாதபுர அரசு மருத்துவக் கல்லூரி எதிரே சுமார் 100க்கும் மேற்படோர் சாலைமறியலில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்