ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் தடை செய்யப்பட்ட சீன பொருள்.. - அதிகாரிகள் அதிரடி..

x

ராமேஸ்வரத்தில் தடை செய்யப்பட்ட சீன இன்ஜின்களை பயன்படுத்திய படகுகளின் வலைகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீன்பிடி படகுகளில் தடை செய்யப்பட்ட சீன இன்ஜினைகள் பயன்படுத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தடை செய்யப்பட்ட சீன இஞ்சின்களை பயன்படுத்தி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வருவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள் சீன எஞ்சின்களை பயன்படுத்திய இரண்டு படகுகளின் வலைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அதன் உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்