நாட்டை உலுக்கிய பெண் டாக்டர் கொலை... ராமநாதபுரம் GH-ல் முதன்முறையாக அதிரடி மாற்றம்

x

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் அடிப்படையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 500 படுக்கைகள் கொண்ட ஐந்து மாடி புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தளங்களிலும் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், அங்கு பணியாற்றும் பாதுகாவலர்களுக்கு வாக்கி டாக்கி முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இங்கு 23 பாதுகாவலர்கள், தனியார் நிறுவன ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்