வாழைப்பழம் மாதிரி பேசிய சொந்தகார பெண் - ரூ.58 லட்சம் கொடுத்து விட்டு கதறும் பெண்

x

வாழைப்பழம் மாதிரி பேசிய சொந்தகார பெண் - ரூ.58 லட்சம் கொடுத்து விட்டு கதறும் பெண்

வி.ஏ.ஓ வேலை வாங்கி தருவதாக கூறி, தன்னிடம் 58 லட்சம் ரூபாய் பெற்று உறவின பெண் மோசடி செய்ததாக ராமநாதபுர மாவட்ட எஸ்.பி.யிடம் பெண் ஒருவர் புகாரளித்திருக்கிறார்.

ராமநாதபுரம் மாவட்டம் தலைதோப்பு கிராமத்தை சேர்ந்தவர் சுமதி. இவரிடம், இவரின் உறவினரான சுஜாந்தினி என்பவர், தனக்கு அரசு அதிகாரிகள் தெரியும் என்றும், அதன் மூலம் வி.ஏ.ஓ வேலை பெற்றுத் தருவதாகவும் கூறி 13 லட்சம் ரூபாய் பெற்றதாக சொல்லப்படுகிறது. 2021 -இல் பணம் பெற்றதாக கூறப்படும் நிலையில், தொடர்ந்து வேலை பெற்றுத் தராமல் சுஜாந்தினி இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்தை திருப்பிக் கேட்ட சுமதியிடம், பணத்தை தன்னுடைய டிரஸ்ட் அக்கவுண்ட்டில் செலுத்தியதாகவும், அந்த கணக்கில் பல கோடி ரூபாய் இருப்பதால் அதனை மீட்க பணம் தேவை எனக்கூறி மேலும் 45 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாக தெரிகிறது. இப்படி அடுத்தடுத்து ஏமாந்து மன உளைச்சலுக்கு ஆளான தன்னை, ஒரு கட்டத்தில் பணத்தை திருப்பி தர மறுத்து கொலை செய்து விடுவதாக சுஜாந்தினி மிரட்டுவதாக மாவட்ட எஸ்.பியிடம் சுமதி புகாரளித்திருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்