"காந்தி ஜெயந்தி..! கறி விற்பனை..!" தடையை மீறிய நபர்களுக்கு அதிகாரிகள் அதிரடி | Ramanathapuram

x

காந்தி ஜெயந்தியான இன்று ராமநாதபுரத்தில் இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று மது மற்றும் இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் தடையை மீறி ராமநாதபுரம் நகரில் சில கடைகளில் இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று நடத்திய அதிரடி சோதனையில் சின்னக்கடை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் 25 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. தடையை மீறிய கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்...


Next Story

மேலும் செய்திகள்