உடைந்து தெறித்த ரயில் பிரேக் ஷூ..! நொடிப்பொழுதில் விவசாயிக்கு நடந்த சோகம்.. கதறும் குடும்பம்

x

சத்திரக்குடியை அடுத்த எட்டிவயல்

ரயில்வே தண்டவாளத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் ப்ரேக் ஷீ திடீரென கழன்று பறந்து வந்தது. அப்போது, தண்டவாளத்தின் அருகே உள்ள வயலில் எட்டிவயல் பகுதியை சேர்ந்த விவசாயி சண்முகவேலு பணியாற்றி கொண்டிருந்தபோது, ப்ரேக் ஷீ தலையில் வந்து விழுந்துள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில், சம்பவ இடத்திலேயே சண்முகவேலு உயிரிழந்தார்.

உயிரிழந்த விவசாயின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக தற்போது ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டுவரப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைிடையே,

உயிரிழந்த விவசாயிக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் அவருக்கு ரயில்வே நிர்வாகம் உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்