ராமநாதபுரத்தை சேர்ந்த நிறுவனத்திற்கு தினமும் ரூ.10,000 அபராதம்

x

சிவகங்கை பேருந்து நிலையத்தில் பழைய வணிக கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட, நகராட்சி நிர்வாகம் சார்பில் 1 கோடியே 95 லட்சம் திட்ட மதிப்பில் 12 வனிக நிறுவனம் மற்றும் கழிவறை கட்ட ஒப்பந்தம் விடப்பட்டது. அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து பணி நடைபெற்றது. குறிப்பிட்ட காலத்திற்குள் பணியை முடித்து ஒப்படைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த நிறுவனத்திற்கு நாள் ஒன்றிற்கு, கட்டிடத்தை ஒப்படைக்கும் வரை தினசரி 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்