நடுக்கடலில் சவுதி அரேபியா கப்பல் மோதி உயிர் விட்ட தமிழர் - வழிதெரியாமல் கதறும் மனைவி

x

நடுக்கடலில் சவுதி அரேபியா கப்பல் மோதி உயிர் விட்ட தமிழர் - வழிதெரியாமல் கதறும் மனைவி


பஹ்ரைன் நாட்டில் உயிரிழந்த ராமநாதபுரம் மீனவரின் குடும்பத்திற்கு, தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் குடும்பத்தினர் மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தை சேர்ந்த மீனவர் மருதமலை, பஹ்ரைன் நாட்டிற்கு மீன்பிடிக் கூலி தொழிலுக்குச் சென்ற போது, சவுதி அரேபியா கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த நிலையில், மனைவி விஜயசாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில்,

இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களுக்கு தமிழக அரசு 10 லட்ச ரூபாய் நிதி வழங்குவது போல, பஹ்ரைனில் உயிரிழந்த மீனவர் மருதமலைக்கும் உரிய நிவாரண நிதி பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்