ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மீனவப்பெண்-பரபரப்பு

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை விடுதலை செய்யாததை கண்டித்து மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் உறவினர்கள் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்... கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி பாம்பனை சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளையும் 35 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்..

மீனவர்கள் பிடித்துச் செல்லப்பட்டு 60 நாட்களுக்கு மேலாகியும் விடுதலை செய்யவில்லை என்று கூறி அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்... அப்போது மீனவப் பெண் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு த*கொலைக்கு முயன்றதால் பெரும் பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்