பூமிக்கடியில் சிக்கிய 15 உயிர்கள்... 12 மணி நேர போராட்டம் - துடித்து நின்ற ஒற்றை இதயம்

x

ஜுன்ஜுனு மாவட்டத்தில், ஹெச்சிஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான கோலிஹான் சுரங்கத்தில் ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு ஒன்று கல்கத்தாவில் இருந்து வந்திருந்தது. ஆய்வை முடித்துக் கொண்டு நேற்றிரவு சுரங்கத்தில் உள்ள லிப்ட்டில் மேலே வந்த போது, லிஃப்ட்டின் சங்கிலி எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதில் உள்ளே இருந்த 15 பேரும் 700 மீட்டர் ஆழத்தில் சிக்கிக் கொண்டனர்... தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்... எ​ஞ்சிய 14 பேரும் காலில் காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .


Next Story

மேலும் செய்திகள்