தமிழகத்தில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை - பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

x

தமிழகத்தில் திண்டுக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், வத்திபட்டி, பாலப்பநாயக்கன்பட்டி, பண்ணுவார்பட்டி, பள்ளபட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டித் தீர்த்த‌து. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள், தமிழக, கர்நாடக பகுதிகளில் அரை மணி நேரம் கனமழை பெய்த‌து.வேலூர் மாவட்டத்தில், குடியாத்தம் நகரம், மேல் ஆலத்தூர் ,நெல்லூர் பேட்டை, கல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேவலாபுரம், கதவாளம், சோமலாபுரம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்த‌து.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சுற்று வட்டார பகுதிகளில் அகரம்சீகூர், வாதிஷ்டபுரம், அத்தியூர், ஒகளூர் உட்பட பல்வேறு கிராமங்களில் கனமழை கொட்டித் தீர்த‌து. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரம‌ப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்