மஞ்சள் எச்சரிக்கை... கொட்டி தீர்க்கும் பேய் மழை

x

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கோழிக்கோடு மற்றும் வயநாட்டில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, குட்டியாடி மலைப்பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி, தொட்டிபாலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆற்றில் வெள்ளம் பாய்தோடிய காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்