லஞ்ச ஒழிப்புதுறை திடீர் ரெய்டு.. கலெக்டர் ஆபிஸில் லட்சக்கணக்கில் சிக்கிய பணம்

x

திண்டுக்கல் மாவட்டத்தில் தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு, கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக, மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, உள்ளாட்சி நிதி தணிக்கை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத சுமார் 2 லட்ச ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். தொடர்ந்து அதிகாரி, அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்