சேற்றில் இறங்கி சாக்கடை குப்பைகளை கையில் அள்ளிய ராதாகிருஷ்ணன் | Radhakrishnan

x

நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மற்றும் கட்டடக் கழிவுகளை அகற்றி சென்னையை தூய்மையாக பராமரிக்கும் வகையில், தீவிர தூய்மைப் பணியை மாஸ் கிளீனிங் திட்டத்தின் கீழ் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் புதுப்பேட்டை கூவம் ஆற்றில் துவக்கி வைத்தார். புதுப்பேட்டை கூவம் ஆற்றை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் கட்டிட கழிவுகள், பழைய கார்கள் உள்ளிட்ட 150 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இப்பகுதியில் புதிய கழிப்பிடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

முன்னதாக ஆணையர் கையில் கையுறைகளுடன் களத்தில் இறங்கி குப்பைகளை நேரடியாக அகற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்