உஷார் மக்களே.. மாநகராட்சி ஆணையருக்கு ஷாக் கொடுத்த வடமாநில நபர்

x

சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அளித்துள்ள புகாரில், தனது பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து வாட்ஸ் அப் கணக்கை சிலர் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளார். அதன் மூலம், தனக்கு நெருக்கமானவர்களிடம் அவசர தேவை என்று பணம் கேட்டு மோசடியில் ஈடுபட சிலர் முயன்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மோசடி குறித்து தன்னிடம் பலர் போன் செய்து தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மோசடி செய்யும் நபரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது, வடமாநில நபர் என தெரிய வந்த‌தாகவும், போலீசில் புகார் அளிக்கப்போவதாக கூறியதும், தனது புகைப்படத்தை நீக்கியதாகவும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, வடமாநில நபரின் செல்போன் எண்ணை வைத்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்