காலாண்டு லீவில் அரசு பள்ளிக்குள் பகீர்.. தீயாய் பரவும் வீடியோ

x

ஸ்ரீவைகுண்டம் அருகே காலாண்டு விடுமுறை நாளில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி ஜெயில் போல இருப்பதாக புலம்பும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் காலாண்டு விடுமுறை கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் ஆறாம் தேதி வரை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறையில் வகுப்புகள் நடைபெற்றது. கேட்டை பூட்டி வைத்தபடி பள்ளி செயல்பட்டு வந்த நிலையில், ஜெயில் போல பள்ளி இருப்பதாக மாணவர்கள் புலம்பும் வீடியோ வைரலாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்