ஆம்ஸ்ட்ராங்கை புதைத்த பின் திடுக் தகவல்.. `கட்டாயத்தில்' கொன்றதாக புன்னை பாலு பரபரப்பு வாக்குமூலம்

x

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைதானவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன

கடந்த ஆண்டு ஆற்காடு சுரேஷ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக, ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக, ஆற்காடு சுரேஷின் சகோதரர் புன்னை பாலு வாக்குமூலம் அளித்திருந்தார். குறிப்பாக, ஆற்காடு சுரேஷ் இறந்த நாளில் இருந்தே ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஐந்து முறை இதற்கான முயற்சி மேற்கொண்டதில் தங்களிடம் போதுமான ஆள்கள் இல்லாததால் கொலை செய்ய முடியாமல் போனதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும், ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளன்று எப்படியும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்தாக வேண்டுமென்ற நோக்கில் இச்செயலை செய்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக அழைத்தால் யாரும் வர மாட்டார்கள் என்பதால், வேறொரு பிரச்சனை எனக் கூறி கடைசியாக கைதான மூன்று பேரையும் புன்னை பாலுவின் உறவினரான மணிவண்ணன் என்பவர் அழைத்துச் சென்றது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்