சுங்கச்சாவடியில் வெடித்த போராட்டம்.. பறந்து வந்த தாசில்தார்- புதுக்கோட்டையில் பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லெம்பலக்குடி சுங்கச்சாவடியில் பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து, அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை முதல் சுங்கக் கட்டணம் வசூலிக்காமல் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் திருமயம் வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் சுங்கச்சாவடி நிர்வாகம் போனஸ் வழங்க ஒப்புதல் அளித்தது.

இதைத் தொடர்ந்து 18 மணி நேர போராட்டம் முடிவுக்கு வந்து, ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.


Next Story

மேலும் செய்திகள்