புதுகையில் இருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை

x

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 மீனவர்களையும், அவர்களது 3 விசைப்படகுகளையும், இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்கள் இரண்டு விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு விசைப்படகிலும், நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். இவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்