கொய்யா பழத்துக்கு ஆசைப்பட்டு..! கிணற்றில் தவறி விழுந்து பலியான சிறுவன்..! புதுக்கோட்டை அதிர்ச்சி

x

நந்தனவயல் வடக்கு காலனி பகுதியைச் சேர்ந்த தம்பதி சுதாகர் - ஆரண்யா. இவர்களுக்கு, 2 குழந்தைகள் உள்ள நிலையில், 4 வயது மகனான சித்தார்த், வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில், கொய்யா பறிக்க முயன்றதாக தெரிகிறது. அப்போது, அருகில் இருந்த கிணற்றில் சித்தார்த் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறுவனின் உடலை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கணேஷ் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்